
21ஆம் திருத்தச் சட்டம் தொடர்பாக கட்சிகளுக்கு இடையில் பொது இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தலைமையில் இன்று இடம்பெற்ற அனைத்து கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தின் போது இந்த இணக்கம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்ற இணக்கமும் எட்டப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி மட்டுமே பாதுகாப்பு அமைச்சு பதவியை வகிக்கலாம் என்ற இணக்கப்பாடும் எட்டப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
அத்துடன் 21ஆம் திருத்த சட்டத்திற்கு தங்களது முழுமையான ஆதரவினை வழங்குவதாக தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்துள்ளது.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனை குறிப்பிட்டதாக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, மேலும் பல விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்