மிருக்காட்சி சாலையில் உயிரிழந்த விலங்குகளுக்கு அஞ்சலி செலுத்திய விலங்குகள் நல ஆர்வலர்கள்

அமெரிக்கா,ஜுன் 03

பொலிவியாவின் லா பாஸில் உள்ள நகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ளூர் மிருகக்காட்சி சாலையில் உயிரிழந்த விலங்குகளுக்கு பொதுமக்களும், விலங்குகள் நல ஆர்வலர்களும் அஞ்சலி செலுத்தினர்.

மிருகக்காட்சி சாலையில் பல விலங்குகள் இறந்திருக்கும் நிலையில் அதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

மிருகக்காட்சி சாலை அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே விலங்குகள் உயிரிழந்திருக்கக்கூடும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால் உயிரிழந்த விலங்குகள், வெளியில் இருந்து மீட்டு அழைத்துவரப்பட்ட போதே பலவீனமாக இருந்ததாக மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *