வடக்கு தொடருந்து வீதியின் காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான நாளாந்த தொடருந்து சேவைகள் நாளை (26) முதல் மீண்டும் இடம்பெறவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த தொடருந்து காலை 5.15 க்கு காங்கேசன்துறையிலிருந்து வவுனியா நோக்கியும் பிற்பகல் 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கியும் பயணிக்கவுள்ளது.
பயணத் தடை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த தொடருந்து சேவை 72 நாட்களின் பின்னர் நாளை மீண்டும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.