ஒரு கள்வனைக் காப்பாற்ற இன்னுமொரு கள்வன் களமிறக்கம் – முன்னாள் பெண் அமைச்சர் சாடல்

நாட்டில் ஒரு கள்வனைக் காப்பாற்ற இன்னுமொரு கள்வன் களமிறக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் பெண் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

சிங்கள பேரினவாத பக்கத்தில் பிரதமர் பதவிக்கு ஆலோசனைகள் முன்னெடுத்த போது ”மூழ்கிற கப்பலில் தான் ஏற மாட்டேன்” என ரணில் விக்கிரமசிங்க கூறிவிட்டு விரைவாக இந்த பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்

அந்த வகையில் இந்த விடயமானது, கோட்டபாய ,மகிந்த போன்ற ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்றும் நோக்கில் ரணில் ,ராஜதந்திரமாக செயற்பட்டதனை பார்க்கக்கூடியதாக உள்ளது.

இருந்த போதிலும் அதால பாலத்தில் உள்ள நாட்டின் பொருளாதாரத்தை எவராலும் உடனடியாக சீர் செய்ய முடியாது. ரணில் பிரதமர் பதவிக்கு வந்த பிற்பாடும் எல்லா விலைவாசிகளும் அதிகரித்துக்கொண்டு செல்வதுடன் மாத்திரமின்றி பொருட்களுக்கான தட்டுப்பாடும் தொடர்ந்து நீடித்தவாறே செல்கிறது.

எனவே ” ஒரு கள்வனைக் காப்பாற்ற இன்னுமொரு கள்வன் களமிறங்கப்பட்டுள்ளார் என்பது நிதர்சனமான உண்மை ”என்றார் .

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *