
கொழும்பு,ஜுன் 04
வெள்ளவத்தையில் இராணுவ சிப்பாயொருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வெள்ளவத்தை தயா வீதிக்கருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்திற்கு செல்லும் ஒழுங்கையை அண்டி காவலுக்கு நின்ற இராணுவ சிப்பாய்களில் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.