கிளிநொச்சியில் 208 கிலோ கேரலா கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி விவேகநந்தாநகர் பகுதியில் 208 கிலோ கேரலா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் நேற்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் மன்னார் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 208 கிலோ எடையுடையது எனவும், அதன் இலங்கை பெறுமதி 5 கோடி மதிக்கத்தக்கது எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *