திருகோணமலையில் காணாமல்போன யுவதிகள் கண்டுப்பிடிப்பு!

திருகோணமலை – கந்தளாய் பகுதியில் நேற்று காணாமல் போயிருந்த மூன்று யுவதிகள் பொலிஸாரினால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸ் நிலைய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, குறித்த யுவதிகளிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கந்தளாய் நகரிலுள்ள கேக் நிறுவனமொன்றில் இம் மூன்று இளம் யுவதிகளும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

நேற்று (3) மாலையில் வேலைக்குச் சென்றோர் வீடு திரும்ப வில்லை எனவும் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி, யுவதிகளை கண்டுப்பிடித்துள்ளதுடன் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *