மென்பொருளுக்காக SPC  644 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக கூறப்படுவதை மறுக்கும் EWIS

கொழும்பு,ஜுன் 04

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துக்கு மென்பொருள் தயாரித்து வழங்குவதற்கு 644 மில்லியன் ரூபா தனக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுவதை EWIS (ஈவிஸ்) நிறுவனம் மறுத்துள்ளது.
தேவைகளை சரியாக பூர்த்தி செய்யாத மென்பொருளுக்கு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் (SPC – எஸ்.பி.சி) 644 மில்லியன் ரூபா செலவிட்டதாக, நாடாளுமன்ற கோப் (COPE) குழு விசாரணையின்போது, அக்கூட்டுத்தாபன பிரதிநிநிதியினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இம்மென்பொருளுக்காக 664 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டதுடன், பராமரிப்புக் கட்டணமாக மாதாந்தம் 5 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டதாகவும் அப்பிரதிநிதி தெரிவித்தார். எனினும் தேவையான சகல தரவு உள்ளீடுகளையும் இம்மென்பொருளில் தரவேற்ற முடியவில்லை எனவும் அவர் கூறினார்.

இம்மென்பொருளை EWIS  நிறுவனம் தயாரித்ததாகவும் கோப் குழு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டிருந்தது

EWIS நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ விக்கிரமநாயக்க கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், EWIS நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ விக்கிரமநாயக்க இது தொடர்பாக கூறுகையில்,

“மென்பொருளுக்காக 600 மில்லியன் ரூபாவுக்கு மேல் வழங்கப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள். மென்பொருளுக்காக எமக்கு அவ்வாறு பணம் வழங்கப்படவில்லை. இம்மென்பொருள் தாயரிப்பதற்கு 83 மில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டது. இத்திட்டத்தின் மொத்த செலவு 233 மில்லியன் ரூபா ஆகும். 233 மில்லியன் ரூபாவில், மென்பொருளுக்கான 83 மில்லியன் ரூபா தவிர்ந்த ஏனைய செலவுகளில், நாடளாவிய ரீதியிலான வலைப்பின்னல், சுமார் 300 கணினிகள், பிரிண்டர்கள், மேசைகள், கதிரைகளுக்கான செலவுகளும் அடங்கும்”  எனவும் அவர் கூறினார்.

2015 ஆம் ஆண்டு முதல் எஸ்.பி.சி. நிறுவனம் தனக்கு பணம் வழக்கவில்லை எனவும், இரு வருட உத்தரவாத காலம் முடிவடைந்த பின் 2020 நவம்பரில் இருந்தே தமக்கு பணம் வழங்கியதாகவும் கூறினார்.

இம்மென்பொருள் மூலம் 2015 ஆம் ஆண்டிலிருந்து 45,000 கொள்வனவு கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 2020 ஜனவரியிலிருந்து இதுவரை 950 கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *