பொலிசாரை தாக்கிய எம்.பியின் மகன் – படகில் அவுஸ்திரேலியா சென்றாரா?

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நிந்தித்த குற்றச்சாட்டின் கீழ் தேடப்படும் நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் தான் தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ளதாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் உவிந்து வெத்தாராச்சி, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நிந்தித்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்வதற்காக பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் அவர் தனது முகநூல் பதிவில் இலங்கை பொலிஸாரே நான் படகு மூலம் சற்றுமுன்னர் மெல்பேர்ன் வந்து சேர்ந்தேன் – தற்போது என்ன செய்வது என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *