மருத்துவமனைக்குள் வைத்து வைத்தியர் மீது கடும் தாக்குதல்: 4 பேர் கைது!

பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வைத்தியர் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் குற்றம் சுமத்தியதை அடுத்து நேற்று (03) இரவு 9.00 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பதுளை பதுலுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *