
யாழ்ப்பாணம்,ஜுன் 04
யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் முதியவர் ஒருவர் கொண்டு சென்ற மிளகாய்த்தூள் பொதியை திருடர்கள் பறித்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அந்தவகையில் குறித்த முதியவர் தனது சமையல் தேவைக்காக கடைக்குச் சென்று மிளகாய்த்தூள் வாங்கிக்கொண்டு வீதியில் சென்றுள்ளார்.
இந்த வேளையில், அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த திருடர்கள் மிளகாய்த்தூளை பறித்து சென்றுள்ளனர்.
குறித்த முதியவர் கத்தி கூச்சலிட்ட போதும், அயல் மக்கள் ஓடி வருவதற்கு முன்னர் திருடர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.