
ரஷ்ய விமானம் ஒன்று அதன் பயணிகளுடன் அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுக்கப்பட்டது .
அதன் பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பப்பட்ட போதும் , விமானம் இன்னும் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது
இதற்காக ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதுவரை அழைத்த ரஷ்யா , ராஜதந்திர கண்டனத்தை வெளிப்படுத்தியது .
இதனை அடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சு , விரைவாக இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என கோரியுள்ளது .
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கு பாதகம் ஏற்படாதவாறு , இந்த பிரச்சினையைத் தீர்க்குமாறும் ரஷ்யா இலங்கையை அறிவுறுத்தியுள்ளது .