நாட்டில் மேலும் 45 பேர் கொரோனா தொற்றால் மரணம்!

இலங்கையில் நேற்று (24) கொரோனா வைரஸ் தொற்றால் 45 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது.

மேலும் இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,099 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 1,190 பேர் இன்று (25) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 296,040 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *