வடக்கு-கிழக்கு விவசாயிகள் மீனவர்களுக்கு இந்தியா இலவசமாக மண்ணெண்ணை வழங்க ஏற்பாடு!
வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்குவதற்கு யாழில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
இதனடிப்படையில் இரண்டரை இலட்சம் லீட்டர் மண்ணெண்ணை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரும் ஏற்பாடுகளை இந்திய தூதரகம் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக மீனவர்களும் விவசாயிகளும் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் அதோடு அதற்கான விலையும் அதிகமாக காணப்படுகிறது.
இந்தியாவில் இருந்து இரண்டரை இலட்சம் மண்ணேண்னையை எடுத்து வரவுள்ளதாக யாழில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.