
கொழும்பு, ஜுன் 05
வரும் செவ்வாய் கிழமை (07) முதல் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
2,500 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் நேற்று (4) நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் மாதிரிகள் இன்று (05) பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொது மக்களை கோரியுள்ளது