அரச ஊழியர்களின் ஓய்வு தொடர்பான அறிவிப்பு

கொழும்பு, ஜுன் 05

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச உழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை கடந்த ஜனவரி மாதம் முதல் 65 ஆக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் 55 வயதில் தங்களுடைய சுய விருப்பத்திற்கு அமைய ஓய்வு பெறமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 3 வருடங்களாக குறைந்து 62 ஆக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்குரிய நிலையில், அரச நிறுவனங்களில் முதியோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமையை சுட்டிக்காட்டி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *