
புங்குடுதீவு பாலத்தினூடாக புங்குடு தீவுப் பிரதேசத்துக்குக் கடல் வழியாகக் கொண்டு செல்லப்படும் உயர் அழுத்த மின்மார்க்க வடங்கள் மற்றும் மின் கம்பங்களைப் பராமரிக்கும் பணிகள் இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளன.
கடல்நீர் வற்றும் காலங்களிலேயே பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால் நாளை தொடக்கம் எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கட்டம் கட்டமாக இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு இலங்கை மின்சாரசபை தீர்மானித்துள்ளது.
எனவே குறித்த காலப் பகுதியில் வேலணை – புங்குடுதீவு பாலத்தினூடாகப் பயணிப்போருக்கு சில பிரச்சினைகள், போக்குவரத்துத் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நயினாதீவு திருவிழாக்காலத்தில் இந்தப் பணிகள் இடம்பெற மாட்டாது என்றும் குறித்த திருவிழாப் போக்குவரத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்