ரஷ்யாவுடனான விவகாரம்: இராஜதந்திர மட்டதிற்கு செல்லும் முன்னர் பிரச்சினையை ஏன் தீர்க்கவில்லை? – சஜித்

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினையை கையாளும் முறை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை கண்டித்துள்ளார்.

நாட்டின் சுற்றுலா துறையின் பிரதான ஆதாரமாகவும், இலங்கையின் தேயிலை ஏற்றுமதியின் பிரதான ஏற்றுமதித் தளமாகவும் ரஷ்யா விளங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இராஜதந்திர மட்டதிற்கு செல்லும் முன்னர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் ஏன் தலையிடவில்லை என்றும் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

நிலைமையை மோசமாக்க அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் தனது திறமையின்மையை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இதனால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் கடுமையாக சாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *