
கொழும்பு, ஜூன் 05
ரஷ்யாவுக்கு இலங்கைக்கும் இடையில் விமான பயணங்கள் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் ஊடாக பிரதமர் இந்த விடயத்தினை ரஷ்யாவிக்கு அறிவித்துள்ளார்.
ஆனால், தற்போது காணப்படும் பிரச்சினையானது சட்ட ரீதியான பிரச்சினையே என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையில் இல்லை என்றும் அது தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என்றும் வெளிவிவகார அமைச்சின் ஊடாக ரஷ்யாவிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.