சாவின் விளிம்பில் 9 பேர் – கருணைக் கொலை செய்யுமாறு கண்ணீர் விடும் இலங்கையர்கள்

தமிழகம் திருச்சி தடுப்பு முகாமில் கடந்த 17 நாட்களாக இலங்கையர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.விசா காலம் நிறைவடைந்த பின்னர் அந்த நாட்டில் தங்கியிருந்தமை,மற்றும் சட்ட விரோத முறையில் நாட்டுக்குள் நுழைந்தமை போன்ற பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு தட்டுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில்:

17 நாளாக போராட்டம் தொடர்கிறது. அதில் ஒன்பது பேரின் நிலை மிகமிக கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை எந்த அதிகாரிகளும் எங்களை வந்து பார்க்கவும் இல்லை விடுதலை தொடர்பான எந்த முடிவுகளும் கூறவும் இல்லை.

எங்களுக்கான விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியவில்லை எனில், ஈழத்தமிழர்களை கருணைக் கொலை செய்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

மேலும் இன்றைய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் முகமாக, திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஏனைய அனைத்து ஈழ தமிழர்களும் எங்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் என தெரிவித்து , ஒரு நாள் அடையாள போராட்டத்தினை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *