மே 9 அமைதியின்மை: 2400 பேருக்கும் மேற்பட்டோர் இதுவரை கைது

கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக இதுவரை 2400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி 2423 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 1069 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்களில் 1300 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி போராட்ட தளங்கள் மீதான தாக்குதல் தொடர்பில் இதுவரை 26 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *