தபால் கட்டணங்களை உயர்த்துமாறு கோரிக்கை

தபால் கட்டணங்களை உயர்த்துமாறு தபால் திணைக்களத்தினால் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சாதாரண தபால் கட்டணத்தை 15 ரூபாவிலிருந்து 20 முதல் 40 ரூபா வரையில் உயர்த்தப்பட வேண்டுமெனவும், அதிவேக தபால் சேவைக்கான கட்டணத்தை 55-65 ரூபாவிலிருந்து 200 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டில் தபால் திணைக்களம் 7.2 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது. தபால் கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால் நட்டம் காரணமாக தபாலகங்கள் மூடப்பட வேண்டிய நிலை உருவாகும் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கடதாசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ள காரணத்தினால் இவ்வாறு கட்டணங்களை அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *