திருகோணமலை மாவட்ட பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை கிராமத்தில் குடியிருப்பு காணியை மீட்க கோரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை நடைபெற்றது.
சுமார் ஐம்பது வருட காலம் தொட்டு குடியிருந்து வந்த மக்களுக்கு சொந்தமான காணியை, துறை முக அதிகார சபையினர், வசிக்கும் குடியிருப்பு காணியை விட்டு எழும்புமாறு பல முறை எச்சரிக்கப்பட்டதையடுத்தே, இந்த ஆர்ப்பாட்டமானது கப்பல் துறை அம்மன் கோயில் வீதியில் இடம்பெற்றது.
1994 ம் ஆண்டு முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் காலத்தில், முன்னாள் துறை முக அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்ரினால் குறித்த கிராமத்தில் மக்கள் மீள் குடியேற்றப்பட்டார்கள்.
இப்பொழுது துறைமுக அதிகார சபையினர் பலவந்தமாக காணிக்குள் புகுந்து வெளியேறுமாறு மக்களிடத்தில் கூறுகின்றனர்.
இருப்பிடத்தை விட்டு வெளியேறி எங்கே செல்வது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
துறைமுக அதிகார சபையினர் அடாத்தாகவும், வீட்டை உடைத்து தள்ளுவதாகவும், சுமார் 17 வருடங்கள் தொடர்ந்து இந்த கிராமத்தில் வாழ்ந்து வருவதாகவும் இதனை விட்டு வெளியேற முடியாது எனவும், மக்கள் தெரிவிக்கின்றனர்.
இக் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவருவது குறிப்பிடத்தக்கது.
“கிராம சேவகர் அனுமதியுடனும், அதிகாரிகளின் அறிவிப்புக்கு பின்னரே 17 வருடங்களாக வாழ்ந்து வருகிறோம்.
வீட்டை உடைத்து காணியை அபகரிக்க துறை முக அதிகார சபையினர் அத்துமீறுவது சரியா??, எங்களுக்கு நீதி வேண்டும் எனவும் ஒடுக்கு முறையா எங்களது வயிற்றில் அடிப்பதா அரசின் நோக்கம் எனவும் பதாகைகளை ஏந்தியவாறும் காணியை அபகரிக்காதே அபகரிக்காதே என்ற கோசங்களையும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இதில் கலந்து கொண்டதுடன் துறை முக அதிகார சபையினரின் அடாத்தான நடவடிக்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறும் நீதியை நிலை நாட்டுமாறும் உரிய அதிகாரிகளிடத்தில் அம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


பிறசெய்திகள்