ஏரோஃப்ளோட் குறித்து நீதிமன்றில் சமர்ப்பிப்புகளை முன்வைக்கவுள்ள சட்டமா அதிபர்

ரஷ்யாவின் ‘Aeroflot’ பிரச்சினையால் அசௌகரியங்களுக்கு உள்ளான அனைத்து பயணிகளிடமும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மன்னிப்பு கோரியுள்ளார்.

அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மேலதிகமாக இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு இந்த பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அமைச்சர் டி சில்வா ஒப்புக்கொண்டார்.

அனைத்து தரப்பினருக்கும் நியாயமான தீர்ப்பு வழங்குவதற்கான சட்ட கட்டமைப்பை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

எனவே, Aeroflot பிரச்சினை தொடர்பில் சட்டமா அதிபர் நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புகளை முன்வைப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த பிரச்சினை இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான தகராறு என்றும், அரசாங்கத்திற்கு இதில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *