நாட்டிற்கு மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!

நாட்டிற்கு மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குறித்த தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பைசர் தடுப்பூசிகள் ஆரம்பத்தில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை முதல் டோஸாகப் பெற்றவர்களுக்கு 2 ஆவது டோஸாக வழங்கப்பட்டது.

இருப்பினும் மேலும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் விரைவில் பெறப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *