அமளிகளுக்கு இடையே முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

நாடாளுமன்றத்தின் பெகாஸஸ் விவகாரம், விவசாயிகளின் போராட்டம் என பல விடயங்களை எழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முக்கிய சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி இந்த வாரத்தில் 4 சட்டமூலங்களை நிறைவேற்ற அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.  அதேநேரம் சில அரசாணைகள் சட்டமூலங்களாக தாக்கல் செய்யப்பட ஆறுவார கால அவகாசம் மட்டுமே உள்ளது.

அவை காலாவதியாகிவிட்டால் மீண்டும் புதிய அரசாணைகளை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *