இலங்கைக்கு உருளைக்கிழங்கு வழங்குகிறது பங்களாதேஷ்!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் உணவுப் பற்றாக்குறையை ஈடு செய்ய உதவும் வகையில் உருளைக்கிழங்கை அனுப்புவது குறித்து பங்களாதேஷ் பரிசீலித்து வருகிறது.

சார்க் செயலாளர் நாயகம் எசல ருவான் வீரகோனுடனான சந்திப்பின் போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இந்த உறுதிமொழியை வழங்கினார்.

பங்களாதேஷ் பிரதமரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சார்க் செயலாளர் நாயகம் எசல ருவான் வீரகோன் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்ததாக டாக்கா ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு கொவிட் தொற்று நோய் தான் காரணம் என்று கூறிய வீரகோன், பங்களாதேஷ் இலங்கைக்கு அளித்து வரும் ஆதரவை பாராட்டினார்.

மேலும் , இலங்கையில் அரிசி உற்பத்தி 50% குறைந்துள்ளதால் நாட்டுக்கு தற்போது உரம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் உணவுப் பற்றாக்குறையை ஈடுசெய்ய உதவும் வகையில் இலங்கைக்கு உருளைக்கிழங்கு வழங்கலாம் என பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் உக்ரைன்-ரஷ்யா போரைத் தொடர்ந்து சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள உணவுப் பிரச்சினைக்கு மத்தியில் அதிக உணவு, தானிய பயிர்ச்செய்கையில் பங்களாதேஷ் ஆர்வம் காட்டி வருவதாகவும் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

உவர் நிலம் மற்றும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய நெல்லினங்களை உருவாக்கி விவசாயச் செய்கயை மேம்படுத்த பங்களாதேஷ் ஆராய்ச்சியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் கூறினார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *