ஹோமாகமவில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு!

ஹோமாகம பிரதான பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள கால்வாயில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆணொருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின்படி, சுமார் 8 அடி ஆழமுள்ள கால்வாயில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும் எனினும் அவர் குறித்து, இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இது கொலையா அல்லது கால்வாயில் விழுந்து இறந்துள்ளாரா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *