திருமலையில் சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு!(படங்கள் இணைப்பு)

திருகோணமலை கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம், திருகோணமலை பிரேதேச செயலாகம்,Green Forest Ceylon,ஆகியவை இணைந்து நேற்றைய தின சர்வதேச சுற்றாடல் தினத்தினை பல்வேறு வேலைத்திட்டங்கள் மூலம் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது .

திருகோணமலை மான்கள் சரணாலையப்பகுதியுள் காணப்படட பார்த்தீனிய செடி அகற்றுதல், உடைந்த போத்தல்கண்ணாடிகளை அகற்றுதல் ,மற்றும் பிளாஸ்ரிக், பொலித்தின்கள் அகற்றுதல், மரநடுகை, ,கடற்கரை சுத்தம் செய்தல், சுற்றுசூழல் பிரச்சாரம் செய்தல், கோணேசர் கோவில் அடிவாரக்கடல் பரப்பில் குறிப்பிடட அளவு பகுதியில் காணப்படட பொலித்தின்,பிளாஸ்ரிக்கழிவுகளை அகற்றுதல். போன்ற செயல்பாடுகள் மூலம் சுற்றுசுழல்தின நிகழ்வில் முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரேதச செயலாளர்,பிரதேசபை தவிசாளர்.,செயலாளர்,பொலிஸ் திணைக்களத்தினர் ,பிராந்திய வைத்திய அதிகாரி,பொதுசுகாதார பரிசோதகர்கள்,திணைக்கள ஊழியர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள், பொது அமைப்புக்கள்,சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *