தொடரும் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டிற்கு ஏற்பட்ட மற்றுமொரு சிக்கல்!

நாட்டில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகின்றது.

இவ்வாறான நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல்வேறு துறை சார் செயற்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளின் வருகையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மே மாதத்திற்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 30,207 ஆக பதிவாகியுள்ளது.

SLTDA இன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட முந்தைய தரவு ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 62,980 ஆக இருந்தது என்பதைக் காட்டுகிறது. மே மாதத்திற்கான எண்ணிக்கை ஒரு மாத காலத்தில் வருகை பாதியாகக் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

“ஜூன் 5 ஆம் தேதி வரையிலான மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 383,036 ஆக உள்ளது” என்று SLTDA இன் டைரக்டர்-ஜெனரல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வீழ்ச்சி நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *