இன்று மொஸ்கோ நோக்கி புறப்படுகின்றது ஏரோஃப்ளோட் விமானம் !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏரோஃப்ளோட் விமானம் இன்று (திங்கட்கிழமை) மாலை மொஸ்கோ நோக்கி புறப்படவுள்ளது.

குறித்த விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் இன்று இடைநிறுத்தப்பட்டது.

சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவையடுத்து நீதிமன்றம் குறித்த உத்தரவை இடைநிறுத்தி உத்தரவிட்டது.

இதனையடுத்து, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள A330 வகை விமானம் (SU289) இன்று மொஸ்கோ நோக்கி புறப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *