ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – அமைச்சர் பந்துல

ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பை இப்போது வழங்குவது சாத்தியமில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை பொருளாதார நெருக்கடி நிலைமையைச் சந்தித்துள்ளது.

இதை ஒவ்வொரு ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை நான் 100 வீதம் ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆனால், நாட்டின் இப்போதைய நிலைமையில் இது சாத்தியம் இல்லை.

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு உட்பட நலன்புரி நடவடிக்கைகளைச் செய்வதானால், மேலதிகமாக வரி விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

நாட்டில் மேலதிக வரி விதிப்புகளைச் செய்தால், பொதுமக்களே பாதிக்கப்படுவார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *