மோடியை சந்திக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்!

அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசவுள்ளனர்.

இதற்காக அவர்கள் இருவரும் நேற்று தனித்தனியே விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக்கூறப்பட்டாளும் அரசியல் சார்ந்த விடயங்களும் பேசப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

தமிழகத்தின் முக்கிய பிரச்சினையாக இருக்கும் மேகதாது அணை குறித்தும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும்  பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *