கொழும்பில் பேய் மழை; வௌ்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

கொழும்பில் காலையிலிருந்து தொடர்ச்சியாக சுமார் 3 மணிநேரத்துக்கு மேலாக கடுமையாக மழை பெய்து கொண்டே இருக்கிறது.

இதனால், பிரதான வீதிகளிலும் தாழிநில பகுதிகளிலும் காட்டாறு வெள்ளம் கரைப்புரண்டு ஓடுவதைப்போல, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. மழையும் சோவென்ற சத்தத்துடன் பெய்துகொண்டிருக்கின்றது.

வீதிகள் பல வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. அதே​நேரத்தில், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்களும் காணப்படுகின்றன. வீதியோரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் பல, கவிழ்ந்து விழுந்துகிடக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *