துபாயில் ஒரே நாளில் கோடீஸ்வரரான தமிழன்!

ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆவதெல்லாம் வெறும் சினிமாவில் மட்டுமே கண்டிருப்போம். தற்பொழுது நிஜத்திலும் தமிழர் ஒருவருக்கு நடந்திருக்கின்றது.

சமீபத்தில் துபாயில் வசித்து வரும் தமிழர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். “துபாயில் எனது சொந்த உணவு விடுதியைத் தொடங்க வேண்டும் என்று நான் எப்போதும் கனவு கொண்டிருப்பேன். ஆனால் என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதனுக்கு இது சாத்தியமில்லை என்று நினைத்தேன். ஆனால் அனைத்துமே சாத்தியம் என்பதை இப்போது நான் உறுதியாக அறிவேன். மஹூசுஸுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார் நசீர் அலி.

தொடர்ந்து அவர் கூறுகையில், “நான் எனது சொந்தத் தொழிலைத் தொடங்கியதும், எனது குடும்பத்தை மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து வருவேன். அந்த நல்ல நாட்கள் திரும்புவதற்காக என் மனைவியும் இரண்டு குழந்தைகளும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நாங்கள் நான்கு பேரும் மீண்டும் ஒன்றாக இருப்பதற்கு நான் மிகவும் ஆவலாக உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

Advertisement

பல மாதங்களாக வேலையில்லாமல் இருந்ததால் தான் அனுபவித்த கஷ்டங்களை மறக்காமல், இதேபோன்ற சூழ்நிலைகளில் மற்றவர்களுக்கு உதவ தனது வெற்றிகளில் ஒரு பகுதியையும் ஒதுக்குவேன் என்றும் நசீர் அலி கூறியுள்ளார். “நான் வேலை தேடும் போது கஷ்டங்களையும் ஏமாற்றங்களையும் கண்டிருக்கிறேன். வேலை இல்லாமல் இருப்பது எப்படி இருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும்.

எனவே, நான் வேலையில்லாமல் தவிக்கும் நபர்களுக்கு ஆதரவு கொடுப்பேன்.,இதனால் அவர்கள் நம்பிக்கையை இழக்க மாட்டார்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றி நேர்மறையாகவும் நம்பிக்கையுடனும் இருக்க முடியும்”என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

“மஹூசுஸ் டிராவில் கலந்து கொண்டு தங்கள் அதிர்ஷ்டத்தை தொடர்ந்து முயற்சிக்கும்படி அனைவருக்கும் நான் அறிவுறுத்துகிறேன், ஒரு நாள் அவர்களும் தங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியும்” என்று நசீர் அலி தெரிவித்துள்ளார். www.mahzooz.ae வழியாக பதிவுசெய்து ஒரு பாட்டில் தண்ணீரை வாங்குவதன் மூலம் மஹ்சூஸில் பங்கேற்கலாம். வாங்கிய ஒவ்வொரு பாட்டில் தண்ணீரும் (35 திர்ஹம்) டிராவில் கலந்து கொள்வதற்கான தகுதியை வழங்குகிறது.

அடுத்த டிரா ஜூலை 24, 2021 சனிக்கிழமை ஐக்கிய அரபு அமீரக நேரப்படி இரவு 9:00 மணிக்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *