முகத்துவாரம் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இளைஞனின் பின்னணி என்ன?

கொழும்பு – முகத்துவாரம் – ரெட்பானாவத்தை பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த இளைஞர் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

நேற்று மாலை 5 மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்த இருவரால் இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கொழும்பு – அளுத்மாவத்தை பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் பலியானார்.

இவ்வாறான பின்னணியில் கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகின.

அதில் 6 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *