தோற்றுப்போன ஜனாதிபதியாக பதவியில் இருந்து விலகேன்! -கோத்தா

தோல்­வி­ய­டைந்த ஜனா­தி­ப­தி­யாக நான் பதவி வில­கத் தயா­ரில்லை என்று ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார்.

செய்தி நிறு­வ­னம் ஒன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ண­லி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

மீண்­டும் நான் தேர்­த­லில் போட்­டி­யி­டப் போவ­தில்லை.

ஆனால் எனது பத­விக்­கா­லத்­தின் எஞ்­சிய இரண்டு ஆண்­டு­க­ளை­யும் முடிக்­கா­மல் வெளி­யே­ற­மாட்­டேன். தோல்­வி­யுற்ற ஜனா­தி­ப­தி­யாக நான் பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற முடி­யாது.

தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா, ஜப்­பான் ஆகிய நாடு­க­ளின் ஆத­ர­வைப் எதிர்­பார்த்­துள்­ளேன்.

இந்­திய மற்­றும் சீன தலை­வர்­க­ளுக்கு தனித்­த­னி­யாக உதவி கோரி கடி­த­மும் அனுப்­பி­யுள்­ளேன். மத்­திய கிழக்கு நாடு­க­ளின் தலை­வர்­க­ளு­ட­னும் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளேன்.

கச்­சாய் எண்­ணெய் பெற்­றுக் கொள்ள நீண்ட கால ஒப்­பந்­தங்­களை மேற்­கொள்ள முயல்­கின்­றேன்.

சர்­வ­தேச நாணய நிதி­யத்­தி­டம் முன்­ன­தா­கச் சென்­றி­ருக்­க­வேண்­டும். ஒரு வரு­டத்­துக்கு முன்­னர் சென்­றி­ருந்­தால் இந்த நிலைமை தோன்­றி­யி­ருக்­காது என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *