இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலும் பலப்படுத்தப்படும்! – பிரதமர்

இலஞ்ச, ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவான மற்றும் பயனுள்ள நடவடிக்கையை உறுதி செய்வதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) மேலும் பலப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுவீடன், ஹொங்கொங் போன்ற நாடுகளில் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான சட்டங்களின் உதாரணங்களை லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான உள்ளூர் சட்டங்களைத் திருத்தும் போது கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

கொண்டுவரப்படும் திருத்தங்கள் மற்றும் நடைமுறைப்படுத்த வேண்டிய பொறிமுறை குறித்து பாராளுமன்றம் தீர்மானிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *