மசகு எண்ணெய் விநியோகஸ்தருடன் நீண்ட கால ஒப்பந்தம்! – எரிசக்தி அமைச்சர்

அண்மையில் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு மசகு எண்ணெய் விநியோகஸ்தர்களுடன் நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு உத்தேசித்து வருகின்றது.

தற்போதைய மசகு எண்ணெய் விநியோகஸ்தர் ஒப்பந்தம் மூலம் தெரிவு செய்யப்பட்டதாகவும், விநியோகஸ்தருடனான கலந்துரையாடலை அடுத்து அமெரிக்க டொலரில் இருந்து இலங்கை ரூபாவுக்கு பணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

எனவே, நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தொடர்ச்சியான மசகு எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்வதற்காக விநியோகஸ்தர்களுடன் நீண்ட கால ஒப்பந்தம் குறித்து அமைச்சு விவாதித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *