
இரசாயன, சேதன உரங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!
எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன, சேதன உரங்களை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பெரும்போகத்தில் 800,000 ஹெக்ரெயரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கு தேவையான உரங்களை வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உரக் கம்பனி ஊடாக இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெரும்போக நெற் செய்கைக்கு 150,000 மெட்ரிக்தொன் யூரியா உரம், 45,000 மெட்ரிக்தொன் மியுரேட் ஒஃப் பொஸ்பேற் (MOP) 36,000 மெட்ரிக்தொன் ட்ரிபல் சுப்பர் பொஸ்பேற் (TSP) தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த உரத் தொகையை வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உரக் கம்பனி ஊடாக இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.