யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகம்!

யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகம்!

கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு எரிபொருள் அட்டைகளுக்கு அமைய மண்ணெண்ணெய் இன்றைய தினம் முதல் வழங்கப்படுகிறது.

யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கு அவர்களது பயிர்ச்செய்கை நிலங்களின் அடிப்படையில் முன்னர் எரிபொருள் அட்டை வழங்கப்பட்டது.
அந்த அட்டையைக் காண்பித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும்.

முதல் கட்டமாக விவசாயிகளின் தேவை அளவின் 25 சதவீத மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, எரிபொருள் அட்டை இல்லாத விவசாயிகள் தத்தமது பிரதேச கமநல சேவைகள் நிலையத்தில் விண்ணப்பத்து மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *