
இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய வகையில் மாவட்ட மட்டத்தில் இந்த நிகழ்ச்சிகள் இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலதிக தகவல்களை மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களிலோ அல்லது www.dome.lk என்ற இணையத்தளத்திலோ பெற்றுக்கொள்ள முடியும்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்