பணத்தை மோசடி செய்ததாக ரயில் நிலைய அதிபர் பணி இடைநிறுத்தம்

கொழும்பு,ஜுன் 07

ரயில் பயணச்சீட்டு மற்றும் சரக்கு வருமானத்தில் சுமார் 700,000 ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் அம்பேபுஸ்ஸ நிலைய அதிபர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பேபுஸ்ஸ ரயில் நிலைய அதிபர் அண்மையில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ரயில்வே திணைக்களம் கணக்காய்வு ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் ரயில்வே திணைக்களப் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *