மற்றுமொரு அத்தியாவசிய உணவுப் பொருளின் விலை அதிகரிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் பச்சை அரிசியின் விலை கிலோ 250 ரூபாவாகவும், முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மிக அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்கள் வாங்கி பதுக்கி வைத்திருப்பதுடன், விற்பனையாளர்கள் பொருட்களை சீரற்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நாட்களில் கிராமப்புறங்களில் உள்ள பல கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இல்லாமல் மக்கள் திண்டாடுவதாகவும் தெரிய வருகிறது.

மேலும், கிராமம் மற்றும் தோட்டப் புறங்களின் பொருட்களை கடன் அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கி வந்த விற்பனையாளர்கள் தற்போது அந்த நடைமுறையை நிறுத்தியுள்ளதால் மக்கள் மிக இக்கட்டான நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *