திருகோணமலையில் இடம்பெற்ற பயங்கர விபத்து ஒன்றில், பாலையூற்று பிரதேச பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்ததுடன், கணவன் மற்றும் பிள்ளை படுகாயம் அடைந்துள்ளனர்.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் நேற்று 25.07.2021 ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பலியாகியுள்ளதுடன் அவரது கணவர் மூதூர் வைத்தியசாலையிலும், 7வயதான குழந்தை திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முச்சக்கர வண்டியில் வெருகல் முருகன் கோவிலுக்கு சென்று திரும்பி வருகின்றபோது கார் ஒன்று கட்டுப்பாட்டை மீறி முச்சக்கர வண்டியின்மீது மோதியதால் இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் திருமதி. பாமதி ஞானவேல் (49) எனும் ஆசிரியையே (T/T/St Lady of Loudes R.C. Vidyalayam, பாலையூற்று) உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை சேருவில பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.