வடமாகாண பிரதம செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

வடமாகாண பிரதம செயலாளர் இன்று (26) திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக பணிபுரிந்த அ.பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாக இருந்தது.

குறித்த வெற்றிடத்திற்கு வவுனியா மாவட்ட அரச அதிபராக கடமையாற்றிய சமன் பந்துலசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சமன் பந்துலசேன, இன்று (26) யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்போற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *