16 வயது சிறுமி உயிரிழப்பு-இன்று வழக்கு விசாரணை

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீ காயங்களுடன் உயிரிழந்த 16 வயது சிறுமி தொடர்பான வழக்கை இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.30 விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ரஞ்சித் ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கவில்லை.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைகளை பிற்பகல் 1.30க்கு முன்னெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *