டீசல் மற்றும் பெற்றோல் வழமைபோன்று இன்று விநியோகிக்கப்படும் – எரிசக்தி அமைச்சர்

நாட்டில் இன்று (புதன்கிழமை)  முதல் வழமை போன்று டீசல் மற்றும் பெற்றோல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக டீசல் மற்றும் பெட்ரோல் குறைந்த அளவிலேயே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டது.

அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் ஏற்கனவே நீண்ட வரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வரவுள்ள எரிபொருள் தாங்கி கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

அதற்கு முன்னதாக மேலும் இரண்டு எரிபொருள் தாங்கிகள் நாட்டிற்கு வரவுள்ளதாகவும் அதற்கான கொடுப்பனவுகளுக்கு தேவையான நிதியை இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *