சு.க. மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிமல், மஹிந்த அமரவீர!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்றது.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அரசாங்க அமைச்சர்களாக பதவியேற்ற நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

எவ்வாறாயினும், கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு இந்தக் கலந்துரையாடலில் பிரசன்னமாகியிருந்தது.

அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தற்போதைய அரசாங்கத்தில் அனைத்துக் கட்சி பேதங்களும் இல்லை என்றும் தனிப்பட்ட சுயலாபங்களுக்காக அமைச்சர் பதவிகளை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *