மைக்ரோகிரிட் கட்டமைப்பு மூலம் இலங்கையில் மின்சக்தியை மேம்படுத்தும் டிமோ!

பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் இலங்கையின் முன்னணியில் உள்ள DIMO, மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இலங்கையின் முதலாவது ‘Microgrid புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்தை’ அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த கருத்திட்டத்தின் மூலம் உள்ளூர் தொழிற்துறைகளுக்கு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்க DIMO நிறுவனம் எதிர்பார்க்கிறது. தனது பொறியியல் சேவைகள் மூலம் மாலைதீவு மற்றும் ஆபிரிக்காவின் கிராமப்புறங்களில் தனது வியாபித்துள்ள DIMO, குறித்த வெளிநாட்டு சந்தைகளுக்கும் Microgrid கருத்திட்டதை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளது.

இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (LECO) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன், DIMO நிறுவனத்தினால் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட Microgrid கட்டமைப்பு மூலம், பல்கலைக்கழகத்திற்குத் அவசியமான மின்சாரம் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக தற்போது நடைமுறையில் உள்ள மின்சாரத் தடையின்போது, (13 மணி நேர மின்வெட்டு) ஏற்படும் சிரமங்களை மொரட்டுவை பல்கலைக்கழகத்தினால் சமாளிக்கக் கூடியதாக உள்ளது.

பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த Microgrid கட்டமைப்பு, 375kw Solar PV தொகுதி மற்றும் 418kw கொள்ளவு கொண்ட ஒரு மின்கலம் மற்றும் அவசியமான வேளையில் பயன்படுத்தக் கூடிய 1,170 kW டீசல் மின்பிறப்பாக்கி ஆகியவற்றை கொண்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் காரணமாக, தேசிய மின்கட்டமைப்பை மாத்திரம் சார்ந்திருக்காமல், மொரட்டுவைப் பல்கலைக்கழகம் தனது சொந்த மின்சாரத் தேவைகளை அதன் வளாகத்திலேயே உற்பத்தி செய்து கொள்ள முடிந்துள்ளது.

Microgrid கட்டமைப்பினுள் எல்லா நேரங்களிலும் அவ்வேளைக்கு அவசியமான மின்சக்தியை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் மின்சாரத்தை உருவாக்குகிறது. இதன் விளைவாக அத்தொகுதியில் உள்ள அனைத்து மின்சக்தி மூலங்களையும் பயன்படுத்தி தொடர்ச்சியான தடையில்லாத வகையில் திறனாக மின்சாரத்தை வழங்குவதற்கும் முடிவதோடு, மின்சாரக் கட்டண செலவுகளை குறைக்கவும் முடிகின்றது.

இந்த திட்டத்தில், கலப்பின (Hybrid) தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தீர்வுகளை வழங்குகின்றதும், இத்துறையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றானதுமான DHYBRID உடன் DIMO கைகோர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்; பதவியை தூக்கியெறியும் பசில்!

மாயமான முல்லைத்தீவு சிறுமி ஹட்டனில் கண்டுபிடிப்பு!

கொழும்பு- யாழ் அதிவேக புகையிரத சேவை;பந்துல நடவடிக்கை!

இலங்கை அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரம்;மேலும் 4 பேர் போராட்டத்தில் இணைவு!

உக்ரைனின் அதிரடித் தாக்குதலால் உயர்மட்ட இராணுவத்தளபதியை இழந்த ரஷ்யா!

யாழ்ப்பாண கள்ளுக்கு ஏற்பட்ட மவுசு!

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *